Monday 4 July 2016

நான் ஸ்வாதி பேசுகிறேன்- எனக்காக




நான் ஸ்வாதி பேசுகிறேன், ஏற்கனவே நன் பேசியதாக வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது என் நிலையை விளக்கவே நான் ஸ்வாதி பேசுகிறேன்.Muthaleef

என் நிலை என்னவென்று தெரியாமலே ஊடகங்களாலும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களாலும் , வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசாராலும் திரித்து விடப்படும் கட்டுக்கதைகளுக்குள் ஒளிந்திருப்பது என்ன?,  என்ற கேள்வி யாராலும் வைக்கப்படாத போது என் சார்பில் நானே எனக்காக பேச வேண்டியுள்ளது.

ஒவ்வொரு செய்திகளுக்கு பின்னும் ஒரு நோக்கம் இருக்கிறது, சமுதாய அழுத்தமும் , சாக்கடை எண்ணங்களும் இருக்கிறது என்பது என் விஷயத்தில் ஏனோ அழுத்தமாக பதிவாகி உள்ளது.

நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் என் மீது பரப்பப்படும் கதைகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டுமா? குற்றம் நடக்கும் போதெல்லாம் இந்த சமுதாயம் எங்களுக்கு சொல்லித்தருவது நீ ஒழுங்காக நட, நீ ஒழுங்காக உடையணிந்திருக்க மாட்டாய், நீ சிரித்து பேசியிருப்பாய், நீ ஏன் அவன் காதலை மறுத்தாய், நீ நாகரீகமாக உன் மறுப்பை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? நீ அப்படி நடந்திருக்க வேண்டும் இப்படி நடந்திருக்க வேண்டும், இப்படி அமர வேண்டும், இப்படி பேச வேண்டும் என்றுத்தானே புத்திமதி சொல்கிறீர்கள்.

என்னுடைய வழக்குக்கு வருவதற்கு முன்னாள் நான் சில கேள்விகள் வைக்கிறேன் சற்றே உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த மரபு ரீதியாக தொடரும் ஆணாதிக்க எண்ணங்களை ஓரளவு தள்ளி வைத்துவிட்டு தயவு தாட்சண்யமில்லாமல் பதில் சொல்லுங்கள் என் சகோதரர்களே.

சகோதரர்களே என்று சொல்வதற்கும் காரணம் உண்டு.நாங்கள் அணிகின்ற அதே உடை, நடை , பாவனை எல்லாம் இருந்தும் உங்கள் சகோதரிகளுக்காக உங்கள் பக்கம் சிறு நியாயம் இருக்கும், அது அண்டை வீட்டு பெண்களாக இருக்கும் போது மாறும்.

உங்களில் எத்தனை பேர் எங்கள் போன்ற பெண்கள் உங்களை மோட்டார் சைக்கிளில் முந்தி செல்லும் போது சகித்து ஒதுங்கியுள்ளீர்கள். உங்களில் எத்தனை பேர் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்தால் அதை விமர்சிக்காமல் குறைந்த பட்சம் அதை சாதாரண நிகழ்வாக எடுத்துள்ளீர்கள். 

உங்களில் எத்தனை பேர் உங்களுடன் பணியாற்றும் பெண்ணுக்கு உரிய வாய்ப்பை வழங்க முயற்சித்துள்ளீர்கள், உங்களில் எத்தனை பேர் பாலியல் வன்முறை செய்திகளை படிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உண்மையில் வருந்தியுள்ளீர்கள்.

இதென்ன இது போன்ற கேள்விகள் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கேட்கலாம், ஆனால் இதில் கூட உங்களில் எத்தனை பேருக்கு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த ஆண் என்ற காலாகாலமான எண்ணங்களை உங்களை அறியாமல் நீங்கள் வளர்த்து வருவதை உணரலாம்.

ஆடி கார் ஓட்டி ஒரு பெண் ஒரு ஆளை கொன்றது பற்றி என்ன பரபரப்பாக பேசுகிறீர்கள். அவளுக்குரிய தண்டனை கிடைத்த பின்னரும் அவளைப்பற்றிய புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். ஆனால் குடிபோதையில் பிளாட்பாரத்தில் தூங்கிய அப்பாவிகள் மீது காரை ஏற்றி கொன்ற சல்மான்கான் போன்றவர்கள் மார்க்கெட் இல்லாமலா போய்விட்டார்கள்.

எத்தனையோ குடிபோதை விபத்துகள் நடக்கிறது. ஆனால் இது மட்டும் பெரிது படுத்தப்படுகிறது. ஏன் அவள் பெண் என்பதால் தானே. மது அருந்துவதும், அதன் பின்னர் வாகனத்தை ஓட்டுவதும் ஏற்றுகொள்ள முடியாதது. ஆனால் மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கிகொண்டு செல்வாக்கால் தப்பித்தவர்கள் கூட ஆடி கார் விபத்தை கடுமையாக விமர்சிப்பதன் பின்னணி என்ன.

இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்று கேட்கலாம். இது போன்ற மனோபாவங்கள் மூலம் தான் என் போன்ற பெண்களின் மரணங்கள் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்தவே இந்த கேள்விகளை முன் வைத்தேன்.

ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள், 23 வயதில் அவளுடைய வாழ்க்கை அநியாயமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்கிற உரிமை சாதாரண விலங்குகளுக்கு கூட அளிக்க வேண்டும் என நாம் பேசி வரும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாத எனது வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லையா.

என் போன்ற பெண்களுக்கு நடுச்சாலையில் பொதுவெளியில் அளிக்கப்படும் மரணங்களுக்கு காதலும், கள்ளக்காதலும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என எப்படி சிந்திக்கிறீர்கள். அவன் 3 மாதங்கள் பின் தொடர்ந்தான் காதலை சொன்னான் மறுத்தாள் அதனால் வெட்டினான்.

தேவாங்கு என திட்டினாள் அதனால் வாயிலேயே வெட்டினான். இது போன்ற பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கு உணமைத்தன்மையை தேடினீர்களா? நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் இது உண்மையாகிவிடும்.ஆனால் ராம்குமார் என்பவன் பேசவே இல்லையே. 

அவன் வாக்குமூலம் தருவதற்கு முன்னரே அவன் சொன்னதாக சொல்லப்படும் , பரப்பப்படும் கதைகளை மறுத்து ஏன் இதன் பின்னால் காதல் தான் இருக்க வேண்டுமா?,  வேறு காரணம் எதாவது ஏன் இருக்க கூடாது என்று ஏன் நினைக்க மறுக்கிறீர்கள் காரணம் இந்த செய்தியில் தான் கிளுகிளுப்பு இருக்கிறது.

மூன்று மாதங்கள் பின் தொடர்ந்தால் ஒருவனுக்கு கொலைவெறி வருமா? , அப்படி கொலை செய்பவன் இப்படித்தான் திட்டம் போட்டு செய்வானா?, வறுமையில் வாடும் ஒருவன் சென்னை வந்த மூன்று மாதத்தில் என் பின்னால் வந்திருக்கலாம் , ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால் கொலை செய்ய நினைப்பானா? அதற்கு என்ன சரியான காரணம்?

கோபம் வருபவன் கையில் கிடைப்பதை கொண்டு குத்துவான், ஆசிட் ஊற்றுவான். ஆனால் திட்டம் போட்டு ஊரிலிருந்து அரிவாளை கொண்டு வந்து பதற்றமின்றி வெட்டுவானா? அதன் பின்னர் திட்டமிட்டபடி சரியாக தப்பித்து செல்வானா?

நானும் அவனும் பேசினோம் பழகினோம், சாட்டிங் செய்தோம், வாட்ஸ் அப்பில் பேசினோம் என்றெல்லாம் வழக்கை திசைத்திருப்ப திரித்து விடப்படும் கதைகளில் பேசிப்பழகியதற்கு என்ன ஆதாரத்தை வைத்துள்ளீர்கள் என்று யாராவது கேட்டீர்களா? செய்திக்கு கிளுகிளுப்பாக இருக்கிறது என்பதற்காகவும் நான் என்ன செய்வது நான் எழுதாவிட்டால் அவர் எழுதுகிறார் இதில் நான் மட்டும் சும்மா இருப்பதா என்ற எண்ணம் தானே உங்களை எழுத தூண்டுகிறது.

நான் அப்படி பழகியிருந்தால் அதே ரயில் நிலையத்தில், சாலையில் எத்தனையோ கண்கள் எங்களை பார்த்திருக்கும், என் நண்பர்களுக்கும் அது தெரிந்திருக்கும் யாராவது அதை உறுதி படுத்தினார்களா? அல்லது உறுதி படுத்தவேண்டும் அதன் பின்னர் காதலிருந்தது, தேவாங்குன்னு சொன்னாள் என்று திட்டினால் என்பதை நம்பணும் என்று உங்களுக்கு தோன்றியதா?

இந்த விஷயத்தில் போலீசாரின் புலனாய்வு எப்படி இருந்தது என்பதற்கு சிறு உதாரணம் என்னை வெட்டிய ராம்குமார், அதன் பின்னர் ரூமை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டான். அப்படியானால் அவன் தலைமறைவு. 

கொலை நடந்த பின்னர் லாட்ஜுகளில் மேன்ஷன்களில் சோதனையிட்டோம் என்று சொல்லும் போலீசார் கொலை நடந்த அன்றிலிருந்து சூளைமேட்டில் உள்ள லாட்ஜுகளிலிருந்து எத்தனை பேர் ரூமை காலி செய்துள்ளனர் என்ற விபரத்தை 25, 26 தேதிகளில் கூட எடுத்திருந்தால் ராம்குமார் என்பவன் சிக்கியிருப்பானே?

ஆனால் சிசிடிவு கேமரா பதிவு காட்சிகளை வைத்து அந்த மேன்ஷன் வழியாக கேட்டுகொண்டு போகும்போதுதான் வாட்ச் மேன் இவனா இவன் தான் ராம்குமார், 24 ந்தேதி ரூமை பூட்டிவிட்டு போனவன் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். இப்படித்தான் இருக்கிறது புலனாய்வு.

தொண்டையில் வெட்டுபட்ட ராம்குமார் பேசக்கூட முடியாது என்று நெல்லை மருத்துவ மனை தலைமை மருத்துவர் கூறுகிறார். ஆனால் நாம் பலரும் ஸ்வாதி என்னை அலட்சியப்ப்டுத்தினால் அதனால் கொன்றேன் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் என்று எழுதுகிறோம் நம்புகிறோம். இப்படி போகும் வழக்கில் ராம்குமார் கொலை செய்த காரணத்தை முன் கூட்டியே அவன் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னரே பரப்பவேண்டிய அவசியம் என்ன.

ஏன் ராம்குமார் கூலிப்படை  கையாளாக இருக்க கூடாது? என்னை கொலை செய்து செல்போனை எடுத்து செல்ல அவனை ஏன் யாராவது அனுப்பி இருக்க கூடாது? ரத்தகறை சட்டையுடன் ராம்குமார் சாலையில் சென்றிருக்க முடியுமா? அல்லது மேன்ஷனுக்குள்தான் போயிருக்க முடியுமா? மேன்ஷனில் உடனிருந்தது யார்? இப்போது அவர் எங்கே? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதி யார் சொல்வது. 

போங்க அடுத்து நந்தினி என்ற பெண் விபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டாள் அதில் அவள் ஏன் ஸ்கூட்டியை ஓட்டணும் , எதற்கு துரத்தணும் என்பது போன்ற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புங்கள். என் வழக்கு ஒரு தலைக்காதல் வழ்க்காகவே முடித்து வைக்கப்படட்டும்.





நான் ஸ்வாதி பேசுகிறேன்- எனக்காக




நான் ஸ்வாதி பேசுகிறேன், ஏற்கனவே நன் பேசியதாக வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது என் நிலையை விளக்கவே நான் ஸ்வாதி பேசுகிறேன்.

என் நிலை என்னவென்று தெரியாமலே ஊடகங்களாலும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களாலும் , வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசாராலும் திரித்து விடப்படும் கட்டுக்கதைகளுக்குள் ஒளிந்திருப்பது என்ன?,  என்ற கேள்வி யாராலும் வைக்கப்படாத போது என் சார்பில் நானே எனக்காக பேச வேண்டியுள்ளது.

ஒவ்வொரு செய்திகளுக்கு பின்னும் ஒரு நோக்கம் இருக்கிறது, சமுதாய அழுத்தமும் , சாக்கடை எண்ணங்களும் இருக்கிறது என்பது என் விஷயத்தில் ஏனோ அழுத்தமாக பதிவாகி உள்ளது.

நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் என் மீது பரப்பப்படும் கதைகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டுமா? குற்றம் நடக்கும் போதெல்லாம் இந்த சமுதாயம் எங்களுக்கு சொல்லித்தருவது நீ ஒழுங்காக நட, நீ ஒழுங்காக உடையணிந்திருக்க மாட்டாய், நீ சிரித்து பேசியிருப்பாய், நீ ஏன் அவன் காதலை மறுத்தாய், நீ நாகரீகமாக உன் மறுப்பை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? நீ அப்படி நடந்திருக்க வேண்டும் இப்படி நடந்திருக்க வேண்டும், இப்படி அமர வேண்டும், இப்படி பேச வேண்டும் என்றுத்தானே புத்திமதி சொல்கிறீர்கள்.

என்னுடைய வழக்குக்கு வருவதற்கு முன்னாள் நான் சில கேள்விகள் வைக்கிறேன் சற்றே உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த மரபு ரீதியாக தொடரும் ஆணாதிக்க எண்ணங்களை ஓரளவு தள்ளி வைத்துவிட்டு தயவு தாட்சண்யமில்லாமல் பதில் சொல்லுங்கள் என் சகோதரர்களே.

சகோதரர்களே என்று சொல்வதற்கும் காரணம் உண்டு.நாங்கள் அணிகின்ற அதே உடை, நடை , பாவனை எல்லாம் இருந்தும் உங்கள் சகோதரிகளுக்காக உங்கள் பக்கம் சிறு நியாயம் இருக்கும், அது அண்டை வீட்டு பெண்களாக இருக்கும் போது மாறும்.

உங்களில் எத்தனை பேர் எங்கள் போன்ற பெண்கள் உங்களை மோட்டார் சைக்கிளில் முந்தி செல்லும் போது சகித்து ஒதுங்கியுள்ளீர்கள். உங்களில் எத்தனை பேர் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்தால் அதை விமர்சிக்காமல் குறைந்த பட்சம் அதை சாதாரண நிகழ்வாக எடுத்துள்ளீர்கள். 

உங்களில் எத்தனை பேர் உங்களுடன் பணியாற்றும் பெண்ணுக்கு உரிய வாய்ப்பை வழங்க முயற்சித்துள்ளீர்கள், உங்களில் எத்தனை பேர் பாலியல் வன்முறை செய்திகளை படிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உண்மையில் வருந்தியுள்ளீர்கள்.

இதென்ன இது போன்ற கேள்விகள் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கேட்கலாம், ஆனால் இதில் கூட உங்களில் எத்தனை பேருக்கு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த ஆண் என்ற காலாகாலமான எண்ணங்களை உங்களை அறியாமல் நீங்கள் வளர்த்து வருவதை உணரலாம்.

ஆடி கார் ஓட்டி ஒரு பெண் ஒரு ஆளை கொன்றது பற்றி என்ன பரபரப்பாக பேசுகிறீர்கள். அவளுக்குரிய தண்டனை கிடைத்த பின்னரும் அவளைப்பற்றிய புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். ஆனால் குடிபோதையில் பிளாட்பாரத்தில் தூங்கிய அப்பாவிகள் மீது காரை ஏற்றி கொன்ற சல்மான்கான் போன்றவர்கள் மார்க்கெட் இல்லாமலா போய்விட்டார்கள்.

எத்தனையோ குடிபோதை விபத்துகள் நடக்கிறது. ஆனால் இது மட்டும் பெரிது படுத்தப்படுகிறது. ஏன் அவள் பெண் என்பதால் தானே. மது அருந்துவதும், அதன் பின்னர் வாகனத்தை ஓட்டுவதும் ஏற்றுகொள்ள முடியாதது. ஆனால் மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கிகொண்டு செல்வாக்கால் தப்பித்தவர்கள் கூட ஆடி கார் விபத்தை கடுமையாக விமர்சிப்பதன் பின்னணி என்ன.

இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்று கேட்கலாம். இது போன்ற மனோபாவங்கள் மூலம் தான் என் போன்ற பெண்களின் மரணங்கள் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்தவே இந்த கேள்விகளை முன் வைத்தேன்.

ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள், 23 வயதில் அவளுடைய வாழ்க்கை அநியாயமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்கிற உரிமை சாதாரண விலங்குகளுக்கு கூட அளிக்க வேண்டும் என நாம் பேசி வரும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாத எனது வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லையா.

என் போன்ற பெண்களுக்கு நடுச்சாலையில் பொதுவெளியில் அளிக்கப்படும் மரணங்களுக்கு காதலும், கள்ளக்காதலும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என எப்படி சிந்திக்கிறீர்கள். அவன் 3 மாதங்கள் பின் தொடர்ந்தான் காதலை சொன்னான் மறுத்தாள் அதனால் வெட்டினான்.

தேவாங்கு என திட்டினாள் அதனால் வாயிலேயே வெட்டினான். இது போன்ற பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கு உணமைத்தன்மையை தேடினீர்களா? நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் இது உண்மையாகிவிடும்.ஆனால் ராம்குமார் என்பவன் பேசவே இல்லையே. 

அவன் வாக்குமூலம் தருவதற்கு முன்னரே அவன் சொன்னதாக சொல்லப்படும் , பரப்பப்படும் கதைகளை மறுத்து ஏன் இதன் பின்னால் காதல் தான் இருக்க வேண்டுமா?,  வேறு காரணம் எதாவது ஏன் இருக்க கூடாது என்று ஏன் நினைக்க மறுக்கிறீர்கள் காரணம் இந்த செய்தியில் தான் கிளுகிளுப்பு இருக்கிறது.

மூன்று மாதங்கள் பின் தொடர்ந்தால் ஒருவனுக்கு கொலைவெறி வருமா? , அப்படி கொலை செய்பவன் இப்படித்தான் திட்டம் போட்டு செய்வானா?, வறுமையில் வாடும் ஒருவன் சென்னை வந்த மூன்று மாதத்தில் என் பின்னால் வந்திருக்கலாம் , ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால் கொலை செய்ய நினைப்பானா? அதற்கு என்ன சரியான காரணம்?

கோபம் வருபவன் கையில் கிடைப்பதை கொண்டு குத்துவான், ஆசிட் ஊற்றுவான். ஆனால் திட்டம் போட்டு ஊரிலிருந்து அரிவாளை கொண்டு வந்து பதற்றமின்றி வெட்டுவானா? அதன் பின்னர் திட்டமிட்டபடி சரியாக தப்பித்து செல்வானா?

நானும் அவனும் பேசினோம் பழகினோம், சாட்டிங் செய்தோம், வாட்ஸ் அப்பில் பேசினோம் என்றெல்லாம் வழக்கை திசைத்திருப்ப திரித்து விடப்படும் கதைகளில் பேசிப்பழகியதற்கு என்ன ஆதாரத்தை வைத்துள்ளீர்கள் என்று யாராவது கேட்டீர்களா? செய்திக்கு கிளுகிளுப்பாக இருக்கிறது என்பதற்காகவும் நான் என்ன செய்வது நான் எழுதாவிட்டால் அவர் எழுதுகிறார் இதில் நான் மட்டும் சும்மா இருப்பதா என்ற எண்ணம் தானே உங்களை எழுத தூண்டுகிறது.

நான் அப்படி பழகியிருந்தால் அதே ரயில் நிலையத்தில், சாலையில் எத்தனையோ கண்கள் எங்களை பார்த்திருக்கும், என் நண்பர்களுக்கும் அது தெரிந்திருக்கும் யாராவது அதை உறுதி படுத்தினார்களா? அல்லது உறுதி படுத்தவேண்டும் அதன் பின்னர் காதலிருந்தது, தேவாங்குன்னு சொன்னாள் என்று திட்டினால் என்பதை நம்பணும் என்று உங்களுக்கு தோன்றியதா?

இந்த விஷயத்தில் போலீசாரின் புலனாய்வு எப்படி இருந்தது என்பதற்கு சிறு உதாரணம் என்னை வெட்டிய ராம்குமார், அதன் பின்னர் ரூமை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டான். அப்படியானால் அவன் தலைமறைவு. 

கொலை நடந்த பின்னர் லாட்ஜுகளில் மேன்ஷன்களில் சோதனையிட்டோம் என்று சொல்லும் போலீசார் கொலை நடந்த அன்றிலிருந்து சூளைமேட்டில் உள்ள லாட்ஜுகளிலிருந்து எத்தனை பேர் ரூமை காலி செய்துள்ளனர் என்ற விபரத்தை 25, 26 தேதிகளில் கூட எடுத்திருந்தால் ராம்குமார் என்பவன் சிக்கியிருப்பானே?

ஆனால் சிசிடிவு கேமரா பதிவு காட்சிகளை வைத்து அந்த மேன்ஷன் வழியாக கேட்டுகொண்டு போகும்போதுதான் வாட்ச் மேன் இவனா இவன் தான் ராம்குமார், 24 ந்தேதி ரூமை பூட்டிவிட்டு போனவன் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். இப்படித்தான் இருக்கிறது புலனாய்வு.

தொண்டையில் வெட்டுபட்ட ராம்குமார் பேசக்கூட முடியாது என்று நெல்லை மருத்துவ மனை தலைமை மருத்துவர் கூறுகிறார். ஆனால் நாம் பலரும் ஸ்வாதி என்னை அலட்சியப்ப்டுத்தினால் அதனால் கொன்றேன் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் என்று எழுதுகிறோம் நம்புகிறோம். இப்படி போகும் வழக்கில் ராம்குமார் கொலை செய்த காரணத்தை முன் கூட்டியே அவன் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னரே பரப்பவேண்டிய அவசியம் என்ன.

ஏன் ராம்குமார் கூலிப்படை  கையாளாக இருக்க கூடாது? என்னை கொலை செய்து செல்போனை எடுத்து செல்ல அவனை ஏன் யாராவது அனுப்பி இருக்க கூடாது? ரத்தகறை சட்டையுடன் ராம்குமார் சாலையில் சென்றிருக்க முடியுமா? அல்லது மேன்ஷனுக்குள்தான் போயிருக்க முடியுமா? மேன்ஷனில் உடனிருந்தது யார்? இப்போது அவர் எங்கே? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதி யார் சொல்வது. 

போங்க அடுத்து நந்தினி என்ற பெண் விபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டாள் அதில் அவள் ஏன் ஸ்கூட்டியை ஓட்டணும் , எதற்கு துரத்தணும் என்பது போன்ற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புங்கள். என் வழக்கு ஒரு தலைக்காதல் வழ்க்காகவே முடித்து வைக்கப்படட்டும்.





Saturday 2 July 2016

திரும்ப திரும்ப பேசற நீ - நொந்து போன நிருபர்கள் டொக்கு வைத்த கமிசனர்




பரபரப்பான ஸ்வாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கொலையாளி அடையாளம் காணப்பட்டு நெல்லையில் கைது செய்யப்பட்டான். Muthaleef

ஸ்வாதி கொலை வழக்கின் பிரச்சனையே கொலைக்கான நோக்கம் என்ன என்பது தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் கொலைக்கான காரணம், கொலையாளி பற்றிய விபரங்களை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொலை நடந்த பகுதியை ஒட்டிய  சூளை மேடு நெடுஞ்சாலை தெருக்கள் என அனைத்து கடைகள் வீடுகளில்   உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தனர். அதில் உள்ள அடையாளங்களை வைத்து ராம்குமாரை போலீசார் செங்கோட்டையில் கைது செய்ய ராம்குமார் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் நேற்றிரவு காட்டுத்தீயாக பரவ காலையில் கமிஷனர் பிரஸ் மீட் என்று அறிவிக்கப்பட்டவுடன் தமிழக ஊடகங்கள் மட்டுமல்ல தேசிய ஊடகத்தினாரும் கமிஷனர் ஸ்வாதி கொலை வழக்கு குறித்து என்ன பதில் சொல்ல போகிறார் என்று நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.

ஸ்வாதியின் கொலைக்கான காரணம் என்ன மூன்று மாதத்தில் கோபம் கொண்டு கொலை செய்வானா ? சரி எப்படி துப்பறிந்தார்கள், நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் பல கேள்விகளுடன்  பிரஸ் மீட்டுக்கு வந்தனர்.

ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்பத்தில் எல்லொருக்கும் தெரிந்த விபரங்களை கூறி கைது வரை சொன்ன கமிஷனர் கேள்விக்கு வந்தார். கேள்வியும் பதிலும்

கேள்வி:  ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் என்ன தொடர்பு ?
பதில் : வழக்கு விசாரணையில் உள்ள விபரங்களை எல்லாம் கேட்காதீர்கள்.

கேள்வி: மூன்று மாதத்திலேயே ஒருவர் கோபம் கொண்டு இந்த அளவுக்கு கொலை செய்ய காரணம் என்ன?

பதில் : அதான் சொல்றேனே எங்களை இன்வெஸ்டிகேட் செய்ய விடுங்கள் இன்றே என்னிடம்  பதிலை கேட்காதீர்கள்.

கேள்வி: எப்படி  ராம்குமாரை குற்றவாளி என்று முடிவு செய்தீர்கள்
பதில் : எல்லாம் பிரஸ் ரிலீசில் உள்ளது.

கேள்வி: வெறுமனே பின் தொடரும் ஒருவரை எப்படி கொலையாளி என்று எப்படி முடிவு செய்தீர்கள்
பதில்: எல்லாம் பிரஸ் ரிலீசில் இருக்கு

கேள்வி: ராம்குமார் குற்றத்தை ஒப்புகொண்டாரா?
பதில் : எங்களை இண்வெஸ்டிகேஷன் செய்ய விடுங்கள்

இதே போன்ற பாணியில் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் , மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் பாணியில் பதில் சொல்ல செய்தியாளர்கள் வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் திரும்ப திரும்ப பேசற நீன்னு சொல்லாத குறையாக நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனாங்க.

யார் யாரையோ கேள்விக்கணைகளால் மடக்கிய முக்கியமான முன்னணி செய்தியாளர்களே அசந்து போகும் அளவுக்கு கமிஷனர் பர்ஃபாமன்ஸ் இருந்தது.

Friday 1 July 2016

நடந்தது என்ன? கொலையாளி சிக்கியது எப்படி? - உதவிய நண்பன் யார்?




ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன , கொலை நடந்ததற்கான காரணம் , செய்யப்பட்ட விதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  Muthaleef

ராம்குமார்(24) பொறியியல் பட்டதாரி , அப்பா பிஎஸ்என்எல் ஊழியர், தம்பி , தங்கை என அளவான குடும்பம். கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். பொறியியல் பட்டத்தை முழுமையாக முடிக்காத ராம்குமார் அதை முடிக்க சென்னை சூளைமேட்டில் எஸ்.ஏ.மேன்ஷனில் தங்கியிருந்துள்ளார்.

ராம்குமார் கல்லூரி பயிலும் போது எடுத்த படம்
சென்னை சூளைமேட்டில் தங்கி வேலை பார்த்து வந்த  ராம்குமார்  ஸ்வாதியை வேலைக்கு செல்லும் வழியில் பார்த்து  ஒருதலையாய் காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்வாதியிடம் தனது காதலை சொல்லியிருக்கலாம். ஸ்வாதி அதை மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


 ஸ்வாதிக்கு ஏற்கனவே காதலன் இருப்பதும் தெரிந்து ராம்குமார் இன்னும் டென்ஷன் ஆகி தினமும் ஸ்வாதியை நெருக்க ஆரம்பித்துள்ளார். இதை பட்டும் படாமலும் தனது குடும்பத்தாரிடம் ஸ்வாதி கூறியுள்ளார்.
ஸ்வாதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் மற்றவர்களுக்கு யாரோ ஒரு நபர் பின் தொடர்வதாக ஸ்வாதியால் சொல்லப்பட்டது.

ராம்குமார்
அவர் பின் தொடர்ந்து வருவது ஸ்வாதியின் குடும்பத்தாருக்கு தெரியும் ஆனால் அவர்கள் போலீசில் ஒத்துழைக்காததால் போலீசாரின் புலனாய்வில் தேக்கம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கடும்  ஆத்திரமடைந்த ராம்குமார் ஸ்வாதியின் மேல் இருந்த கடுமையான ஆத்திரத்தில் கொலை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

 இதற்காக முன் தயாரிப்புகளை எல்லாம் கச்சிதமாக செய்துள்ளார். நெல்லை பகுதிகளில் வாழை குலையை மட்டும் அறுக்க பயன்படும் நீண்ட பிடியுள்ள அரிவாளை தேர்வு செய்துள்ளார். எப்படி அரிவாளை வீசுவது என வாழை மரத்தில் வீசி ஒத்திகை பார்த்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

பின்னர் ஸ்வாதி வந்து செல்லும் நேரம் எப்போது கூட்டம் இல்லாமல் இருக்கும் என்றெல்லாம் கச்சிதமாக நோட்டமிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கூட்டம் குறைவாக இருப்பது தெரிந்துள்ளது. வெட்டிய பின்னர் எப்படி ஓடுவது எங்கு சுவர் ஏறி குதிப்பது ,அரிவாளை எங்கே வைத்து விட்டு ஓடுவது என்பதை எல்லாம் திட்டமிட்டு நோட்டம் பார்த்துள்ளார்.

24 ந்தேதி ஸ்வாதியின் தந்தை விட்டு சென்றவுடன் பின்னலேயே ரயில் நிலையம் சென்ற ராம்குமார் ஸ்வாதி குனிந்த நிலையில் ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் போதே பின்னாலிலிருந்து அரிவாளால் கழுத்தை நோக்கி வெட்டியுள்ளார். அரிவாள் கொஞ்சம் மேலே உயர்ந்து தாடையை இரண்டாக பிளக்க மூளைக்கு செல்லும் முக்கிய ரத்தநாளம் துண்டிக்கப்பட்ட நிலையில் எழுந்த நிலையில் வேரறுந்த மரமாக ஸ்வாதி கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.

பின்னர் ஸ்வாதியின் செல்போனை எடுத்துகொண்ட ராம்குமார் பை , அரிவாளை எடுத்துகொண்டு வேகமாக நடை மேடையில் ஓடி முன்கூட்டியே திட்டமிட்ட படி  அரிவாள் கைப்பிடியை துடைத்து டிராக் ஓரமாக மின்சார பெட்டியின் பின்புறம் வைத்து விட்டு சுவர் ஏறி குதித்து ஒன்றும் தெரியாதது போல் மேன்ஷனில் போய் உட்கார்ந்து கொண்டார்.

கொலையாளி கொலை செய்த விதம் போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஒத்துழைக்கவில்லை. பின்னர் கொலையாளியின் புகைப்படம் மூலம் சூளைமேட்டில் தெருத்தெருவாக போலீசார் விசாரித்தபோதுதான் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் வாட்ச் மேன் ஆமாம் இந்த பையன் இங்குதான் தங்கியிருந்தான் ஒரு வாரமாக ஆள் இல்லை என்று கூற அதன் பிறகு போலீசார் ஜெட் வேகத்தில் இயங்கியுள்ளனர்.

ராம்குமாரின் ஊர் அட்ரசை சேகரித்துள்ளனர். இதனிடையே ஊருக்கு சென்ற ராம்குமார் வீட்டில் விஷயத்தை கூறி அழுதுள்ளார். வீட்டாரும் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் வைத்துள்ளனர். இந்த கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளார். அவர் நெல்லையை சேர்ந்தவரா அல்லது சென்னையை சேர்ந்தவரா என தெரியவில்லை.


போலீசார் ராம்குமாரை பற்றி ரகசியமாக விசாரிக்க நேற்று காலை பெண் எஸ்.ஐ ஒருவரை மாறு வேடத்தில் அனுப்பி உள்ளனர். அவர் விசாரித்து உறுதி படுத்திய பின்னர் போலீசார் ராம்குமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த ராம்குமாரின் தாத்தா உரக்க சத்தம் போட்டு போலீஸ் போலீஸ் வந்துட்டாங்க  என்று கூறி கதவை அடைத்துள்ளார்.

 இதற்குள் ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
குடும்பத்தாரையும் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டனர்.  ராம்குமார் தற்போது நலமாக இருக்கிறார்.


அவர் போலீசில் கொடுக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே உண்மை சம்பவங்கள் தெரியவரும். முதல் கட்ட விசாரணையில் ஒருதலை காதல் என போலீசார் நம்புகின்றனர். அடுத்தடுத்து நடைபெறபோகும் விசாரணை கொலைக்கான காரணத்தை வெளிக்கொணரலாம்.

ஸ்வாதியை கொன்ற கொலையாளி செங்கோட்டையில் கைது - கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி




ஸ்வாதியை கொன்ற கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வைத்து போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டான். போலீசில் சிக்காமல் இருக்க தனது கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டான். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.



நெல்லையை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகனான  ராம்குமார் பொறியியல் பட்டதாரி (Engineering graduate) செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்தவர். கடந்த மூன்று மாதமாக சூளைமேட்டில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

கொலையாளி படத்தை போலீசார் வெளியிட்டபோது சூளைமேட்டில் தங்கியிருந்த மேன்ஷன் வாட்ச்மேன் அடையாளம் காட்டியதன் பேரில் போலீசார் விசாரித்து பிடித்துள்ளனர்.

தற்போது ராம்குமாரின் தம்பி , தங்கை உட்பட குடும்பத்தார் அனைவரையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.

டெய்ல் பீஸ்: கொலை செய்த போது அவன் உடுத்தியிருந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.மேலும் இவன் சென்னையில் வேலை செய்து வந்ததாகவும் அங்கு ஒரு மேன்ஷனில் தங்கியிருந்ததாகவும் தனது நண்பனின் உதவியால் சுவாதியை கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபர் யார்?

இடியாப்ப சிக்கலில் ஸ்வாதி கொலை வழக்கு - அலுவலக நண்பர் சிக்கினார்?


தமிழக போலீசார் வரலாற்றில் ஆளவந்தார் கொலை வழக்கு மிகப்பிரபலம். 1950 களில் சென்னையில் ஆளவந்தார் கொலை வழக்கு சென்னையில் மிகப்பிரபலம். துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் ஒன்று டிரங் பெட்டியில் அடைக்கப்பட்டு ராமேஷ்வராம் மெயிலில் அனுப்பி வைக்கப்பட அது மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அடையாளம் காணமுடியாமல் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் தனது கணவ்ரை காணவில்லை என ஒரு பெண் புகார் அளிக்க அது அந்த பெண்ணின் கணவார் ஆளவந்தாரின் உடலா என மீண்டும் பரபரப்பு தொற்றிகொண்டது.

அதன் பின்னர் ராயபுரம் அருகே கடற்கரையில் சட்டைதுணியில் சுற்றப்பட்ட தலை ஒன்று கிடைக்க தலையும் உடலும் சென்னை அரசு மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டது. தடயவியல், பாரன்சிக் முறை அவ்வளவாக முன்னேற்றமடையாத நேரம்.

முதன் முதலாக இந்த வழக்கில்தான் தடயவியல் துறையின் முக்கியத்துவம் அறியப்பட்டது. உடல் கூறுவியலிலும் தடயவியல் துறையிலும் இந்த வழக்கு முன்மாதிரியாக பேசப்பட்டது. இக்கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை செய்த சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சி.பி.கோபால கிருஷ்ணன் பிரபலம் அடைந்தார்.

பின்னாட்களில், இம்மாதிரியான பல கொலை வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை அளிப்பதற்கு இவரே சிபாரிசு செய்யப்பட்டார். செய்தித்தாள்களிலும் ஏனைய ஊடகங்களிலும் கொலையைப் பற்றிய செய்திகளும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டன. 


குற்றவாளி தம்பதிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர். அதே போன்றதொரு பரபரப்பான கொலை தான் ஸ்வாதியின் கொலையும். கொலைக்கான நோக்கம் என்னவென்று அறிந்து கொள்வதுதான் புலனாய்வின் முதற்படி. அதிலிருந்துதான் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்வர்.

ஆனால் ஸ்வாதி கொலை வழக்கில் இதுபோன்றதொரு எந்த முடிவுக்கும் போலீசாரால் வர முடியவில்லை. குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் இல்லை என்ற கருத்தும் பரவலாக போலீசார் மத்தியில் வைக்கப்படுகிறது.

வெட்டியவன் கூலிப்படை ஆள் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஆனால் சாதாரண இளம்பெண்ணை கொல்லும் அளவுக்கு கூலிப்படையை யார் ஏவுவார்கள் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

போன் கால்கள் செக் பண்ணுவது, சிசி டிவி கேமரா பதிவுகள் உருவத்தை அடையாளம் காண உதவியது ஆனால் அந்த படத்தில் உள்ளவன் இவன் தான் என்று யாராலும் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை. 

தினம் தினம் புது புது தகவல்கள் வந்தாலும் எல்லாமே ஒரு கட்டத்திற்கு மேல் நகர மறுக்கிறது. ஐந்து லட்சம் போன் கால்கள் ஆயிரக்கணக்கானோரிடாம் விசாரணை, நூற்றுக்கும் மேற்பட்ட நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுடனும் விசாரணை என நீண்டுகொண்டே போகிறது.

இதனிடையே இன்று ஸ்வாதியுடன் நெருக்கமாக  ஃபேஸ் புக் சாட்டிங்கில் அதிகம் ஈடுபட்ட நொலம்பூர் வாலிபரை போலீசார் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவன் ஸ்வாதியின் கம்பெனியில் வேலை செய்தவன் எனபது குறிப்பிடத்தக்கது. காதலனின் தம்பி மற்றும் அவனது நண்பர்கள், காதலனின் நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது.

அதே போல் ஸ்வாதியின் நிறுவனத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்துகின்றனர். ஒருவரை கூட விடாமல் இந்த விசாரணை நடக்கின்றனர். 

இது தவிர ஸ்வாதி சமபந்தப்பட்ட அனைத்து கம்ப்யூட்டர் , ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து அதற்காக தனி வேலை நடக்கிறது.

தற்போது கொலையாளி மோட்டார் சைக்கிளில் சென்ற கண்காணிப்பு கேமரா பதிவு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். புதிய கோணங்களில் விசாரணை பலன் தருமா ? இடியாப்ப சிக்கல் விடுபடுமா எனபது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணவழக்கு சிபிஐக்கு மாற்றம் - மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா மர்மசாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோடு டிஎஸ்பியாக  பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உயர் போலீஸ் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அவரது தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார், ஆனால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டு விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை  ரவி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் அமர்வு முன் விசாரணைக்கு ஏற்கப்பட்டு  நடந்து வந்தது. 

பின்னர் இந்த மனு அமர்வு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எம்.வி முரளிதரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சண்முகவேலாயுதம், ‘விஷ்ணுபிரியா சாவு குறித்து விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  விசாரணை நன்றாக நடந்து வருகிறது. ஆகவே  இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார். 

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன் எதிர்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் விஷ்ணு பிரியாவின் தந்தை தமிழக போலீசார் விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது என்று வழக்கு தொடுத்துள்ளார், சமுதாயத்தின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது, ஒருவழக்கில் விசாரணை நடத்தும் போலீசார் அதே காவல்துறையை சேர்ந்த நபர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதை எப்படி அணுகுவார் என்பது கேள்விக்குரிய ஒன்று.

ஆகவே இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம், வழக்கு விபரங்களை சிபிசிஐடி போலீசார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.