Friday 1 July 2016

ஸ்வாதியை கொன்ற கொலையாளி செங்கோட்டையில் கைது - கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி




ஸ்வாதியை கொன்ற கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வைத்து போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டான். போலீசில் சிக்காமல் இருக்க தனது கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டான். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.



நெல்லையை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகனான  ராம்குமார் பொறியியல் பட்டதாரி (Engineering graduate) செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்தவர். கடந்த மூன்று மாதமாக சூளைமேட்டில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

கொலையாளி படத்தை போலீசார் வெளியிட்டபோது சூளைமேட்டில் தங்கியிருந்த மேன்ஷன் வாட்ச்மேன் அடையாளம் காட்டியதன் பேரில் போலீசார் விசாரித்து பிடித்துள்ளனர்.

தற்போது ராம்குமாரின் தம்பி , தங்கை உட்பட குடும்பத்தார் அனைவரையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.

டெய்ல் பீஸ்: கொலை செய்த போது அவன் உடுத்தியிருந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.மேலும் இவன் சென்னையில் வேலை செய்து வந்ததாகவும் அங்கு ஒரு மேன்ஷனில் தங்கியிருந்ததாகவும் தனது நண்பனின் உதவியால் சுவாதியை கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபர் யார்?

No comments:

Post a Comment