Sunday 5 June 2016

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் 4 மீனவரை சிறைபிடித்து சென்றது



இலங்கை கடற்படையினரால் தமிழக  மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீன்பிடி தடைகாலம் முடிந்தபின் கடலுக்கு சென்ற ராமநாதபுரம் மீன்வர்களை 7 பேரை பிடித்து சென்றனர். அதன் பின்னர் மீண்டும் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் மற்றும் ஒரு படகை பிடித்து சென்றனர்.
  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இரண்டுமுறை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவா்கள் 4 பேரை இன்று இலங்கை கடற்படை சிறைபிடித்தது . ஒரு படகுடன் 4 பேரை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 11 மீனவர்கள் ,90 படகுகள் இலங்கையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடந்துள்ள சம்பவத்துடன் சேர்த்து 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 91 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment