Thursday 23 June 2016

ராயப்பேட்டை 4 பெண்கள் கொலை - கணவர் கைது





ராயபேட்டையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட 4 பெண்கள் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. அவர்களது கணவரே கொலை செய்தது தெரிய வந்தது.

ராயபேட்டை முத்து தெருவில் வசித்த சின்னராசு அவரது மனைவி சந்தன வீனா, மகள்கள் பவித்ரா,பரிமளா, சினேகா . மூன்று நாட்களாக பூட்டி கிடந்த வீட்டிலிருந்து நான்கு பெண்களும் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். கணவர் சின்னராசுவை காணவில்லை.



நான்கு பேரும் நிர்வாணமாக பிணமாக கிடந்ததால் அவர்கள் தற்கொலை செய்திருக்க முடியாது கொலை செய்யப்பட்டிருக்கலாம், கணவர் சின்னராசு சிக்கினால் உண்மை தெரியும் என்ற நிலையில் இன்று அதிகாலையில் மெரினா கடற்கரையில் சின்னராசு போலீசாரிடம் சிக்கினார். 

சின்னராசுவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தனவீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்துள்ளார்.

பின்னர் சின்னராசுவை திருமணம் செய்து சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதால் மனைவி மற்றும் மகள்களை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 கடந்த 20 ஆம் தேதி  இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, சண்டையிட்டு சின்னராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு குடித்துவிட்டு வந்த சின்னராஜ் பாண்டியம்மாள் வீட்டினுள் அனுமதிக்காததால், வெளியறையில் படுத்து தூங்கினார். பின்னர் நள்ளிரவு 03.00 மணியளவில் விழித்த சின்னராஜ், கடும் ஆத்திரத்தில்,  தூங்கிக் கொண்டிருந்த மனைவி பாண்டியம்மாளை இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் படுக்கையறைக்கு சென்ற அங்கு தூங்கிக் கொண்டிருந்த பவித்ரா மற்றும் பரிமளா ஆகியோரை இரும்பு ராடால் அடித்தும், 3வது மகள் ஸ்நேகாவை இஸ்திரி பெட்டி ஒயரால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளார். பின்னர் சின்னராஜ் கொலை செய்த பிணங்களுடனே தங்கியிருந்துள்ளார்.

அடுத்த நாள்  வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். 2 நாட்களாக இறந்த பிணங்களுடனே தங்கியிருந்த சின்னராஜ் வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசவே, வீட்டு உரிமையாளர் கேட்டபோது வேறு காரணம் சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.

இறந்த பிணங்களுடன் இரண்டு நாளாக சின்னராசு இருந்துள்ளார். பிணத்தை அப்புறப்படுத்த வழி தெரியாததால் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
  





No comments:

Post a Comment