Thursday 23 June 2016

ஜெ.ஜெ.நகரில் மன உலைச்சலால் தாய் கொலை - பொறியியல் பட்டதாரி கைது


சென்னை திருமங்கலம் ஜெ.ஜெ.நகரில் மன உலைச்சல் காரணமாக பெற்ற தாயையே கிணற்றில் தள்ளி கொலை செய்த பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

 ஜெ .ஜெ .நகரில் உள்ள டி.வி.எஸ்.காலனியில் வசிப்பவர் கிருஷ்ணன், இவரது முதல் மனைவி ராஜாத்தி, இவரது இரண்டாவது மனைவி  ஜோதி பிரவா இவர்களுக்கு  சத்தியகுமார் என்ற மகன் உண்டு.

 சத்தியகுமார் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பு  படித்து  முடித்துவிட்டு கனடாவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பின்னர் சென்னை வந்த தாயுடன் வசித்து வந்துள்ளார்,  யோகா கலையின் மீதும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். சத்தியகுமார் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

மன உலைச்சலால் பாதிக்கப்பட்டு சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். நேற்று மாலை 7 மணி அளவில் தாய் ஜோதி பிரபாவிடம் சண்டை போட்டுள்ளார். திடீரென வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் தூக்கி போட்டு உள்ளார்  பின்னர் அவரும் குதித்துவிட்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சத்தியகுமாரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.

  ஜோதி பிரபா கிணற்றில் மூழ்கி விட்டார், பிணமாக அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்ப பட்டது. சத்திய குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment