சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடர் கடல் சீற்றம் காரணமாக 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வலைகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டன.
சென்னை பட்டினபாக்கம் சீனிவாசா புரத்தில் கடற்கரை ஓரம் ஏராளமான மீனவ மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஒருவார காலமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அலைகள் பொங்கி ஏராளமான வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.
இங்குள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. பல வீடுகள்சுவர்கள் உடைந்து சேதமடைந்து விட்டன. மீன் பிடி வலைகள் 20 க்கும் மேற்பட்டவை கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளை தொகுதி எம்பி, மாவட்ட ஆட்சியர், மயிலாப்பூர் எம்.எல்.ஏ, தாசில்தார் சென்று பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment