Tuesday 7 June 2016

பெரிய மேட்டில் பட்டபகலில் வியாபாரி வெட்டி கொலை --- 4 பேர் கும்பல் வெறிச்செயல்


  பெரிய மேட்டில் பட்டபகலில் வியாபாரி 4 பேர் கும்பலால் வெட்டிகொல்லப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியமேடு பேக்கர்ஸ் தெருவில் இன்று   காலை 10.30 மணி  அளவில்   கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பாரஸ்மல் வயது (59)  என்பவர்  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் வேகமாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு மர்ம ஆசாமிகள் அவரை வழி மறித்து கீழே தள்ளி விட்டனர். அவர் சுதாரித்து எழுவதற்குள் நான்கு பேரும்  சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பரஸ்மலை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல்பிரேத பரிசோதனைக்காக  அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரிய மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட பரஸ்மால் வேப்பேரி  ஜன்மய்யா சாலையில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment