முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் அமைச்சரவை கூட்டத்தை நாராயணசாமி நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி : புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முடிந்தது. முதல் அமைச்சரவை கூட்டம் சிறப்பாக நடந்தது. புதுச்சேரியை வளமாக மாற்றுவோம்.சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு அனுமதி, மீனவர் டீசல் மானியத்திற்கான எண்ணெய் அளவு உயர்வு.மின் கட்டணம் 50% குறைப்பு போன்ற திட்டங்களை அமல்படுத்த உள்ளோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த என்.ஆர். காங் ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும், முதல் பணி மத்திய அரசை அணுகி நிதி பற்றாக்குறையை போக்குவது.
விஐபி கார்களில் சைரன் பயன்படுத்த கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவு பற்றி அமைச்சர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருடன் அரசுக்கு நல்ல உறவு உள்ளது. நான் அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment