Monday 20 June 2016

ஜெயலலிதாவிடம் குட்டு வாங்கிய பொன்முடி


இன்று சட்டமன்றத்தில்  ஜெயலலிதாவுக்கும் பொன்முடிக்கும் அதிக அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவதை பற்றி நடந்த வாக்குவாதத்தில்  அரசு ஊழியர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை 1973 ல் திமுக அரசு கொண்டு வந்தது. அதை 1976 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் ரத்து செய்தார் என்று கூறினார். 
உடனடியாக எழுந்து தலையிட்ட முதல்வர்  ஜெயலலிதா தமிழகத்தில் அதிமுக தொடங்கி முதலில் ஆட்சியை பிடித்தது 1977 ல் பொன்முடி 1976 ல் என்று சொல்கிறார் என்று காலை வாரினார். இதில் சபையில் சிரிப்பலை எழுந்தது. இதைப்பார்த்து சமாளிக்க முடியாமல் தடுமாறிய பொன்முடி உங்களுக்கு கூட இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி சமாளித்தார்.   
 
 

No comments:

Post a Comment