சென்னை ஆர்.கே.நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தண்டையார் பேட்டை வினோபா நகரில் வசிப்பவர் ஹேமாவதி(39). அதிமுக 38 வது வார்டு வட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவரது கணவர் விக்டர். இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.
விக்டர் குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் சண்டை போடுவாராம். இதனால் மனம் உடைந்த ஹேமாவதி இன்று காலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காப்பாற்றப்பட்ட அவர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80% தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment