தனது கணவனை கொன்றவனை ஓராண்டு கழித்து அதே பாணியில் கொன்று பழி தீர்த்த மனைவி போலீசில் சரணடைந்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையம் கிராமத்தை வசித்தவர் பெரியதம்பி.
இவரது மனைவி சுகந்தாமணி இவரது கணவர் பெரியதம்பின் நண்பர் ரவிக்குமார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரிய தம்பியும், ரவிகுமாரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
மது அருந்தும் போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு அதிகமாகியுள்ளது. இதில் ரங்கசாமியின் தலையில் கல்லைப் போட்டு ரவிக்குமார் கொலை செய்தார். போலீசார் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்த ரவி சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
நேற்று இரவு ரவி போதையில் திடீரென ரங்கசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சுகந்தாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தவர்கள் ரவிக்குமாரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
தனது கணவனை கொன்றதுமல்லாமல் தன்னையும் வம்பிக்கிழுக்கும் ரவி மீது சுகந்தாமணி கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கணவனை கொன்ற ரவியை கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்த சுகந்தாமணி இன்று காலை அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துகொண்டு காளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தயாராக நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்துக்கு ரவிகுமார் வந்துள்ளார். பரபரப்பான சாலையில் பலர் முன்னாள் ரவிகுமாரை
இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்ற சுகந்தாமணி தன் கணவனை கொன்றவனை தான் கொன்று விட்டதாக கூறி சரண் அடைந்தார் . அவரை கைது செய்த போலீசார் ரவிக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவனைக் கொன்றவனை ஓராண்டாக காத்திருந்து அதே பாணியில் கல்லால் அடித்து மனைவி கொன்ற விவகாரம் அப்பகுதியில் பொதுமக்களிடம் பரபரப்பான பேச்சாக உள்ளது.
No comments:
Post a Comment