Monday 6 June 2016

ஆர்.கே.தொகுதி பற்றி ஜெயலலிதா பேச்சு -ராமதாஸ் கிண்டல்


ஆர்.கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா கூறியதை ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார். அதே போல் கருணநிதியையும் கிண்டல் அடித்துள்ளார். 
இது குறித்த டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.  ஆர்.கே. நகர் தொகுதியை வியக்கும் வகையில் மாற்றுவேன்: ஜெயலலிதா - வியக்கும் வகையில் என்றால் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கா?

ஆர்.கே. நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக்குவேன்: ஜெயலலிதா - போடி, ஆண்டிப்பட்டி,  பர்கூர், ஸ்ரீரங்கம் எல்லாம் முதன்மை தொகுதியாகிவிட்டதோ?
இதே போல் நேற்று கலைஞர் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கைவிட்டதற்கும் கிண்டல் செய்துள்ளார். 
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜெயலலிதா காரணமல்ல... நானே காரணம்: கலைஞர் - இதில் மட்டும் தானே உங்களுக்குள் போட்டி ஏற்படும்!
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு இப்போதுதான் தூக்கம் கலைந்ததா என்று கேட்டுள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்ய புதிய சட்டம்: ஆணையம் பரிந்துரை- ஒரு வழியா தூக்கம் கலைந்துவிட்டது போலிருக்கிறது!


பெங்களூருவில் இளையராஜா அவமானப்படுத்தப்பட்டதற்கு கண்டன்ம் செய்துள்ளார்.
பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமரியாதை : கண்டிக்கத்தக்கது... கழுதைகளுக்கு தெரியுமா கற்பூரவாசனை?

No comments:

Post a Comment