Saturday 25 June 2016

கோயம்பேட்டில் வியாபாரிக்கு கத்திகுத்து


கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதையில் கீரை வியாபாராம் செய்பவர் மணிகண்டன்(27). கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு அருகிலேயே வாணியம்பாடியை சேர்ந்த சங்கர்(34) என்பவர் பலாப்பழ வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை மணிகண்டனிடம் ஒரு பெண்மணி கீரை விலை கேட்டுள்ளார். விலை படியாததால் வாங்கவில்லை. பின்னர் அந்த பெண்மணி நகர்ந்து பக்கத்தில் உள்ள சங்கர் பலாப்பழ கடையில் பழம் வாங்கியுள்ளார். 

இதை பார்த்து  மணிகண்டன் அந்த பெண்மணியை திட்டியுள்ளார். இது பற்றி சங்கர் தட்டி கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. மணிகண்டனுக்கு ஆதரவாக சடையமுத்து என்பவர் சங்கரை தாக்க ஆத்திரத்தில் சங்கர் பலாப்பழம் நறுக்கும் கத்தியை எடுத்து மணிகண்டன் தொண்டையில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு போலீசார் சங்கரை கைது செய்தனர்.





No comments:

Post a Comment