Monday 13 June 2016

காவலர்களுக்கான சொகுசு பேருந்து கழிவறை – தமிழகம் முழுதும் விரைவில் அறிமுகம்




கழிவறை என்பது அத்யாவசியம் என்பது தற்போது எல்லா இடத்திலும் ஒரு கோஷமாகவே மாறிவருகிறது. இதில்  காவல் பணியில் இருப்பவர்களுக்கு கழிவறை என்பது மிக முக்கியமான தேவை. ஆனால் அவர்கள் பணி புரிவதோ பாதுகாப்பு பணியில் . காவலர்களுக்கும் மற்ற அரசு பணியில் இருப்பவர்களுக்கும் வித்யாசமே அதுதான்.

காவலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் என்பது பணியில் இல்லை. பெரும்பாலும் பாதுகாப்பு பணி என்பதே சாலைகளில் தான். பாதுகாப்புக்கு நிற்கும் இடத்தில்இயற்கை உபாதைக்கு ஒதுங்க கழிவறை என்பதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. காவல் பணியை விட்டும் நகர முடியாது. அதிலும் பெண் காவலர்கள் சொல்லமுடியாத அளவுக்கு சங்கடத்தை சந்திக்க கூடிய நிலை. இதை மேலதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போலீசாருக்கு தயக்கமாக இருக்கும். மற்றொரு புறம் அந்த கோரிக்கையும் , கோரிக்கை வைப்பவரும் எந்த அளவுக்கு பார்க்கப்படுவார்கள் என்பது காவல்துறையில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.


பணியில் உள்ள காவலர்கள் குறிப்பாக பெண்காவலர்கள் நிலையை கருத்தில் கொண்டு தற்போது தமிழக காவல்துறையில் நடமாடும் கழிப்பறை வாகனத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது போன்ற வாகனங்கள் நடைமுறையில் உள்ளதே என்ற கேள்வி எழலாம். ஆனால் அவைகள் தனியாக இழுத்து வரபட்டு நிறுத்தப்படும். இவைகளை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கே சிரமமாக இருக்கும். கழிவறை என்பது தனியாக தெரியும். இதனால் பயன்படுத்துபவர்கள் தயக்கமடைய வாய்ப்புண்டு.


தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள வாகனம் சொகுசு பேருந்து போன்ற தோற்றத்துடன் உள்ளது. சொகுசு பேருந்து போல் இருக்கும் இந்த வாகனத்திற்குள் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் நிறுத்துவதும் எளிது. பயன்படுத்துபவர்களும் தய்க்கமின்றி பயன்படுத்துவர். இந்த வாகனங்கள் தற்போது தென்மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழகம் முழுதும் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த அருமையான திட்டத்தை வடிவமைத்து தமிழக காவல்துறைக்கு அனுப்பி நடைமுறைக்கு கொண்டு வந்த முழு பெருமையும் மதுரை புற நகர் மாவட்ட எஸ்பி விஜேந்திர பிடாரியை சாரும் என போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment