தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அம்மா திட்டங்களின் பட்டியல் மட்டுமே கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது. கவர்னர் உரை என்பது தமிழக அரசின் உரையாகவே உள்ளது. சுருக்கமாக சொன்னால் அம்மா கால அட்டவணை (அம்மா காலண்டர்) தான் கவர்னர் உரை என்று தெரிவித்தார்.
நோக்கியா போன்ற தொழில் நிறுவனங்களை திரும்பக் கொண்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு சென்றதற்கு காரணமே இந்த அரசு தான். திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவர் வசதியாக வந்து செல்லும் வகையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மை. மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் திட்டங்கள் ஆளுநர் உரையில் இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment