Sunday 5 June 2016

அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி - பொதுமக்கள் சாலை மறியல் - தடியடி



சென்னையில் அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதி 10 ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவத்தில் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீஸ் வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பொதுமக்கள் காயமடைந்தனர்.

ராம்குமார்
சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராம் குமார் (16) மற்றும் அவனது நண்பனும் அயனாரம் ரயில்வே காலணியில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காவல்துறை வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பன்  படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேனை ஓட்டி வந்த காவலர்  ஏழுமலை இறங்கி ஓடிவிட்டார்.

அவர் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  மாணவன் பலியானதை பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள்  அயனாவரம்   ஆன்டர்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.து.  அங்கு வந்த போலீசார் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் நிர்மலா என்ற பெண் காயமடைந்தார். அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்து போன மாணவன் ராம்குமார்  தந்தை விக்டர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போன நிலையில் ஒரே மகனான ராம்குமாரையும் விபத்தில் பலி கொடுத்து தாயார் கவிதா கதறி அழுதது எல்லோர் கண்களையும் குளமாக்கியது. போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டினர்.

No comments:

Post a Comment