நாகை மாவட்டம் நாகூர் அருகே ஆம்னி பஸ்சில் 10 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
நாகை மாவட்டம் வழியாக ஆம்னி பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் வேதாரண்யத்தில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ்சை நாகூர் சோதனை சாவடி வழியாக சென்ற ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்..
அப்போது ஒரு பேருந்தை சோதனையிட்ட போது பேருந்தில் இருந்த இரண்டு நபர்கள் வைத்திருந்த பையில் 10 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தங்கத்திற்கு உரிய எந்த ஆவணமும் இல்லை. அதனால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்திய 2 பேரையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்படலாம். ஓடும் பேருந்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது நாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment