Saturday 18 June 2016

அதிமுக செயற்குழு கூடியது 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்



தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இன்று காலை 11 மணிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடந்தது. 
இதில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா , மாநில நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வரை வாழ்த்தி 9 தீர்மானங்களும், ஆர்.கே.நகர், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து 2 தீர்மானங்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் வரட்சியில் வாடுவதை தடுக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும் , நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் , பொது தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கட்சி அணிகளின் செயல்பாடு, அடுத்த கட்ட செயல்பாடு, உள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம் குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment