Friday 10 June 2016

செயின் பறிப்பு ஆரம்பம் - ஓய்வு பெற்ற பெண் தாசில்தார் உட்பட 3 பெண்களிடம் 22 பவுன் பறிப்பு

 சென்னையில் ஒரே நாளில் 22 பவுன் செயின் பறிப்பு - ஓய்வு பெற்ற பென் தாசில்தார் உட்பட மூன்று பெண்களிடம் கைவரிசை



சென்னையில் ஒரே நாளில்  ஓய்வு பெற்ற பென் தாசில்தார் உட்பட மூன்று பெண்களிடம் 22 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றுள்ளனர்.
முகலிவாக்கத்தில் ஒய்வு பெற்ற பெண் தாசில்தார் ஜோனாபார்க் (68). இவர்  பால் வாங்க வெளியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அட்ரஸ் கேட்பது போல்  அவர் கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.  மாங்காடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் பகுதி  காவாங்கரை மஹாவீர் காலனி காலையில் ஹேமாவதி எனபவர் வீட்டு வாசலில் கோலம் போடும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அவர் கழுத்திலிருந்த  7 சவரனை செயினை பறித்து சென்றனர். நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த  கிருத்திகா (37)  என்பவர் திருமணம் ஒன்றிற்கு சென்று விட்டு  பாடி மேம்பாலத்தில் வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 10 சவரன் நகையை பறித்து சென்றனர். நேற்று 24 மணி நேரத்திற்குள் மூன்று பெண்களிடம் 22 பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளனர். மீண்டும் செயின் பறிப்பு ஆசாமிகள் தங்கள் கைவரிசையை துவக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment