கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன் நேற்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார் . இந்த் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கறிஞர் முருகனின் மனைவியின் கள்ளதொடர்பே இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். முருகனின் மனைவி லோகேஷினிக்கும் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக இருக்கும் சண்முகம் என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்துள்ளது. தனது உறவுக்கு தடையாக இருப்பதாக லோகேஷினி கருதி கணவன் முருகனை தீர்த்து கட்ட கள்ளக்காதலன் சண்முகத்திடம் கூற சண்முகம் வியாசர்பாடியை சேர்ந்த
கூலிப்படை ஆட்கள் மணி ,சுப்ரமணி, முரளி ஆகியோரிடம் கூற அவர்கள் தலைமையில் வந்த கும்பல் நேற்று முருகனை வெட்டி சாய்த்தது. தற்போது நான்கு பேர் பிடிபட்ட நிலையில் கள்ளக்காதலன் சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment