Monday 6 June 2016

ஆர்.கே.நகரை தமிழகத்திலேயே முன் மாதிரி தொகுதியாக்குவேன் --- நன்றி அறிவிப்பு பயணத்தில் முதல்வர் நெகிழ்ச்சி


ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெயலலிதா வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது. ஆர்.கே.நகரில் என்னை தேர்ந்தெடுத்த உங்களுக்கு நன்றி கூறவே இங்கு வந்துள்ளேன். எனக்கு மகத்தானவெற்றியை தேடி தந்த உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 6வது முறையாக என்னை முதல்வராக தேர்வு செய்ததற்கும், இரண்டாவது முறையாக என்னை தொடர்ச்சியாக முதலமைச்சராக ஆக்கியதற்கும், தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

எனது நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ள உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.கடந்த ஓராண்டுக்கு முன் என்னை தேர்ந்தெடுத்த போது என் சக்திக்குட்பட்டு இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினேன். இன்னும் நிறைய செய்ய உள்ளேன். தேர்தல் நேரத்தில் பலவாக்குறுதிகளை உங்களுக்கு அளித்தேன் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். விரைவில் அனைத்தையும் நிறைவேற்றுவேன் . தமிழகத்திலேயே ஆர்.கே நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். உங்கள் வரவேற்பை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது. எனது நன்றி பெருக்கை செயலில் காட்டுவேன். பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment