நாகை அருகேகடல் கொந்தளிப்பு காரணமாக் கடலில் தத்தளித்த 41 புதுவை மீனவர்கள் மீட்கப்பாட்டனர். காணமல் போன மேலும் 4 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
புதுவையிலிருந்து 7 படகுகளில் 45 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நாகப்பட்டினம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 45 பேர் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் சிக்கி தவித்தனர். பின்னர் இவர்களில் 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு நாகப்பட்டினம் கரைக்கு திரும்பினர். இதில் ஒரு பைபர் படகு கடலில் அடித்து செல்ல்ப்பட்டுள்ளது. அதிலிருக்கும் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் காரைக்கால் அனுப்பபட்டனர்.
No comments:
Post a Comment