சென்னை ராயபேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண நிலையில் நான்கு பெண்கள் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயபேட்டை பழைய காவல் நிலையம் இருந்த இடத்திற்கு பின்புறம் உள்ள முத்து தெருவில் வசிப்பவர் சின்னராசு(46) காரைக்குடியை சேர்ந்தவர். பட்டினப்பக்கத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளார்.
இவருக்கு சந்தன வீனா (36) என்ற மனைவியும் பவித்ரா(18), பரிமளா(19), ஸ்நேகா(16) என்ற மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர் ஸ்னேகா பிளஸ்டூ படித்து வந்தார். சின்னராசு குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராயபேட்டையில் வசித்து வருகின்றனர்.
அழகான அமைதியான குடும்பம். அக்கம் பக்கத்தவருடன் அவ்வளவாக பழக மாட்டார்கள். இந்நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பி உள்ளனர். மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதன் பிறகு திங்கட்கிழமை முதல் வீடு பூட்டியே கிடந்துள்ளது. அதனால அக்கம் பக்கத்தவர்கள் இவர்கள் ஊருக்கு சென்றுள்ளனர் என்று நினைத்துள்ளனர். நேற்று காலை கடைசியாக சின்னராசுவை மட்டும் அருகில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.
நேற்றிரவு சின்னராசு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, இது பற்றி வீட்டு உரிமையாளர் ராஜா பகதூர், ராயபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே போக முயன்றுள்ளனர்.
ஆனால் வீட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஆளுக்கொரு மூலையில் சந்தனவீனா, பவித்ரா, பரிமளா, சினேகா பிணமாக கிடந்துள்ளனர்.
உடல்கள் அழுகிய நிலையில் நிர்வாணமாக போர்வை போர்த்திய நிலையில் கிடந்துள்ளது. சின்னராசுவை காணவில்லை. நான்கு பேரும் மூன்று நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என தெரிந்துள்ளது.
பின்னர் மூன்று பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணவர் சின்னராசு என்ன ஆனார், இவர்கள் இறப்புக்கு அவர்தான் காரணமா, தற்கொலையா , கொலையா என சின்னராசு பிடிபட்டால் தான் காரணம் தெரியும் என்பதால் சின்னராசுவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment