Wednesday 8 June 2016

கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லால் அடித்து கொலை ---வடபழனியில் சிறுவன் உட்பட 5 பேர் கைது

கொலை செய்யப்பட்ட நாகேஷ்வரராவ்

சென்னை வடபழனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த மோதலில் கள்ளக்காதலனின் அண்ணனை கல்லால் அடித்து கொன்றதாக கள்ளக்காதலியின் கணவன் இரண்டு மகன்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
 சென்னை வடபழனி குமரன் நகரில் வசித்தவர் நாகேஷ்வரராவ்(34). தனியார் வங்கி கலெக்‌ஷன் ஏஜண்ட். திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனார். நாகேஷ்வரராவின் தம்பி ராஜேஷ் இவருக்கு திருமணமாகி விட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். 
இவருக்கும் வடபழனி ராஜமத்திய தெருவில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் விஜயகுமார் எனபவருக்கும் நட்பு. இதில் விஜயகுமார் கடைக்கு வந்து போன பழக்கத்தில் ராஜேஷுக்கும் விஜயகுமார் மனைவி கவுசல்யாவுக்கும் கள்ள தொடர்பு  ஏற்பட்டு கடந்த மாதம் 18 ஆம் தேதி வீட்டைவிட்டு இருவரும் ஓடிவிட்டனர். பின்னர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று விழா ஒன்றில் ராஜேஷ் தரப்பும் , விஜயகுமார் தரப்பும் சந்தித்ததில் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டது. இதில் கல்லால் தாக்கப்பட்ட நாகேஷ்வரராவ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த கொலை தொடர்பாக விஜயகுமார் அவரது மகன்கள் அபிஷேக்(20) , சங்கர்(16) பெயர் மாற்றப்பட்டுள்ளது ), நாகராஜ், மாரி ஆகிய 5 பேரை வடபழனி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment