நாராயணசாமி அவர்கள் என்னை நேரில் சந்தித்து, பதவியேற்பு விழா பற்றிக் கூறினார். மத்திய அமைச்சராக நாராயணசாமி அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து அவரது பணிச் சிறப்பைப் பற்றியும், உண்மையான உழைப்பைப் பற்றியும் நான் நன்கறிவேன். புதுவை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கும் நாராயணசாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில் அந்த மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைத்திடும்; புதுவை மாநிலம் வளர்ச்சி அடைந்து புத்தொளி பெறும்; அதற்கு அவரது கடந்த கால அனுபவம் துணை நிற்கும்; என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட புதுவை மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் நாராயணசாமி அவர்களுக்கும், அவருடைய அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின், புதுவையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment