Monday 13 June 2016

திருவான்மியூரில் 7 பேர் கும்பல் துணிகரம் -பார் உரிமையாளரை வெட்டி 200 பவுன் நகை ரூ.16 லட்சம் கொள்ளை


சென்னை திருவான்மியூரில் அதிகாலையில் கத்தி முனையில் 200 சவரன் தங்க நகை மற்றும் 16 லட்சம் ரொக்கத்தை 7 பேர் கும்பல் கொள்ளையடித்தது.தடுக்க முயன்ற வீட்டு  உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார்.


திருவான்மியூர் எம்ஜிஆர் சாலையில் வசிப்பவர் மதியரசன்(55) , சொந்தமாக பார் நடத்தி வருகிறார், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது , வீட்டில் உள்ள பணம் நகை முதலியவற்றை கேட்டு மிரட்டியுள்ளனர். மதியரசன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த ஆசாமிகள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் மதியரசனை வெட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மதியரசனின் மனைவி செல்வி, மகன் ராதாகிருஷ்ணன், மகள் , மைத்துனர் ஆகியோர் பீரோ லாக்கர் சாவியை கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள்


 வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் மதியரசன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment