Wednesday 8 June 2016

உயர்நீதிமன்றத்தில் 9 வது மாடியில் ஏறி பெண் தற்கொலை முயற்சி

 குடும்ப பிரச்சனை காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இலவச சட்ட உதவி சரிவர கிடைக்காததால் பெண் ஒருவர் விரக்தி அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


 கொடுங்கையூரை சேர்ந்தவர் தனலட்சுமி(35) , இவரது கணவர் ஜெயகுமார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. கள்ளதொடர்பு காரணமாக கணவர் கைவிட்டதாக கூறி குடும்ப நலக்கோர்ட்டில் தனலட்சுமி வழக்கு தொடுத்துள்ளார். இதற்காக இதுவரை 30 க்கும் மேற்ப்பட்ட முறை நடந்த வாய்தாக்களில் இலவச சட்ட உதவி மையத்தில் யாரும் உதவாததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனலட்சுமி இன்று உயர்நீதிமன்றத்தில் எட்டாவது மாடியில் உள்ள இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்தவர் பின்னர் ஒன்பதாவது மாடியில் நின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 
 காவல்துறையினர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து அவர்கள் முயற்சியால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பாதுகாப்பாக தரை இறக்கினர். 

No comments:

Post a Comment