Tuesday 7 June 2016

காதலிக்கு பிறந்தநாள் பரிசு - செயின் பறித்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் கைது



 சென்னை அடையாரில், காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக செயின் பறிப்பில் சாஃப்ட்வேர் இன்ஜினியரை போலீஸார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி (42). கடந்த திங்கட்கிழமை இரவு இவர் அடையாறு காந்தி மண்டபம் அருகே உள்ள பேருந்து நிறுத்ததில்  நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், பேருந்து நிறுத்தம் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசுவது நின்று கொண்டிருந்துள்ளார்.

வசந்தியின் கவனம் திசை திரும்பிய நேரம் பார்த்து திடீரென அந்த நபர், வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி, கூச்சலிட்டார். அப்போது ந்த வழியாக ஜீப்பில் ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கரன், முதல் நிலைக் காவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஜீப்பில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற அந்த இளைஞரை விரட்டினர்.

நீண்ட துரத்தலுக்கு பின்னர்  மோட்டார் சைக்கிளில் இருந்து  கீழே விழுந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் கார்த்திக்கேயன் (24)  ஆயிரம் விளக்கு அஜிஸ்முல்க் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சாஃப்ட்வேர் இன்ஜினியரான கார்த்திகேயன், கந்தன்சாவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசுப் பொருள்  வாங்கிக் கொடுப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment