Tuesday 7 June 2016

பேசிக்கிறாங்க ...




தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு எல்லாமே இப்ப அவர்தான். இப்ப இருக்கிறவர் தான் தனது செயலால நன்மதிப்பை இழந்துட்டாரே. இப்ப அந்த இடத்தில் இந்த அதிகாரிகதான் கோலோச்சுகிறார். ஏற்கனவே கூடுதலாக பொறுப்பு வகித்தவருக்கு இப்ப டிஜிபி அந்தஸ்த்தும் வந்துவிட்டதால் தலைநகருடன், தமிழகத்தையும் இவர்தான் இப்ப பார்த்துக்கிறார் என்பது ஊரறிந்த ரகசியமாக உள்ளது. என்னங்க இது உண்மையா என்று காவல்துறை வட்டாரத்தில் கேட்டால் உங்களுக்கு இப்பத்தான் தெரியுமான்னு கேக்குறாங்க. அப்படியானால் நாம இதுல வீக்குதான் போலிருக்கு. இன்னொரு அதிகாரி விரிவா சொன்னார்.

 சார் இப்ப எல்லாம் அவர்தான். வாய்மொழி உத்தரவா டிரான்ஸ்பர், போஸ்டிங், டிசைடிங் எல்லாம் அவர்தான். பெரியவரை உடனே வீட்டுக்கு அனுப்பலாம் ஆனால் அது பழைய சிஎம். இப்ப அவங்க ராஜதந்திரம் யாரும் அறியாதது. அதனால் லூப் கனெக்‌ஷன் கொடுத்து மெயின புடுங்கிட்டாங்க . நாளையே கூட இவரை இன்டலிஜெண்ட் டிஜிபியாக மாற்றி இயக்கலாம்.மொத்தத்தில் இப்ப இருக்கிறவர் பீஸ புடிங்கியாச்சு என்பது மட்டும் நிஜம் என்றவர் டிகே நான் வரட்டுமா என்று கிளம்பி போனார். என்னடா தமிழ்ல பேசிக்கிட்டிருந்தவர் திடீர்னு டிகே நான் வரட்டுமான்னு போறாரேன்னு எனக்கு குழப்பம். உங்களுக்கு எதாவது விளங்குதா?

No comments:

Post a Comment