Monday 6 June 2016

ரூபாயின் மதிப்பு உயர்கிறது

இந்திய ரூபாயின் மதிப்பு நான்காவது நாளாக உயர்ந்து வருகிறது.


இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஜூன் 7-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.66.90-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 28 காசுகள் உயர்ந்து ரூ.66.97-ஆக இருந்தது.

No comments:

Post a Comment