Friday 10 June 2016

7 பேர் விடுதலை கோரி சென்னையில் இன்று வாகன பேரணி






ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் ,சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி சென்னை எழும்பூரிலிருந்து வாகன பேரணி நடத்த உள்ளதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்திருந்தார். 


சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கக் கோரி சென்னை எழும்பூரிலிருந்து தலைமை செயலகம் வரை வாகனப் பேரணியாக சென்று  தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்படும் , இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக இந்த பேரணி வேலூரிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

 தற்போது அற்புதம்ம்மாள் நடத்தும் வாகன பேரணியில் தமிழ் அமைப்புகள் , பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் பங்கேற்கலாம் என தெரிகிறது. மதியம் 2 மணிக்கு துவக்கப்படும் இந்த பேரணி வாகன பேரணியாக நடத்தாமல் ஊர்வலமாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து புறப்பட்டு ஆல்பர்ட் தியேட்டரை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment