சென்னை மாநில கல்லூரிக்குள் தாறுமாறாக கார் ஓட்டிய மாணவனை அங்கிருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்படுத்தினான். இதில் காரிலிருந்த பெற்றோர் காயமடைந்தனர்.
சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் உமாபதி. சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி. இவர்களது மகன் ராஜா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வானதை ஒட்டி சென்னை சேப்பாக்கம் காமராசர் சாலையில் உள்ள மாநிலக்கல்லூரியில் சேர்வதற்காக பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான காரில் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரிக்குள் வந்தவுடன் கல்லூரி காம்பவுண்டுக்குள் காரை ராஜா ஓட்ட கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்கிருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. கல்லூரி திறக்காததால் மாணவர்கள் யாரும் இல்லை அதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனாலும் காருக்குள்ளிருந்த உமாபதி, துர்கா தேவி பலத்த காயமடைந்து அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment