Monday 6 June 2016

திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

சென்னை திருமங்கலத்தில் பொதுக்கூட்டம் முடிந்த பின் அலங்கார விளக்குகளை கழற்றும் போது எலக்ட்ரீஷியன் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

 திருமங்கலம் ,ஜெ.ஜெ.நகர் பகுதியில் திமுக சார்பில் கருணாநிதியின் 93 வது பிறந்த நாள் விழா பட்டிமன்றம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் மேடையை அவிழ்க்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுகொண்டிருந்தனர். மேடையில் அமைக்கப்பட்டிரு ந்த அலங்கார விளக்குகள் மற்ற மின்சார சாதனங்களையும் அகற்றி கொண்டிருந்தனர்.இதில் பார்த்த சாரதி தெருவை சேர்ந்த தங்கராஜ்(54்) எலக்ட்ரீஷியனும் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த நேரம் ஜங்க்‌ஷன் பாக்ஸ் ஒன்றை கழற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தங்கராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அங்கேயே அவர் பலியானார்.அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து ஜெ,ஜெ.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment