Thursday 9 June 2016

உயிர்த்தெழுவோம் - திருமணவிழாவில் விஜயகாந்த் பரபரப்பு பேச்சு




தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வாய்திறந்துள்ளார். பினிக்ஸ் பறவையாய் கட்சி உயிர்த்தெழும் என பரபரப்பாக பேசியுள்ளார். 


காரைக்குடியில் தே.மு.தி.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், பங்கேற்ற விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு மவுனம் கலைந்தார். திருமண விழாவில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு காரைக்குடியை ஏன் கொடுக்கவில்லை என நினைக்காதீர்கள். கொடுப்பேன். பத்திரிக்கைகள் "விஜயகாந்த் பயப்பட்டு விட்டான்'' என்பார்கள். பத்திரி்க்கைகளை பார்த்து நான் பயப்படுகிறேன் என்கிறார்கள்,  விஜயகாந்த் யாரைக்கண்டும் பயப்படமாட்டான் , நான் பயப்படவில்லை. நீங்களும் பயப்படக்கூடாது. அதுபோல் பத்திரிக்கைகளும் பயப்படாமல் இருக்க வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல தேமுதிக உயிர்தெழுந்து வரும் , பீனிக்ஸ் பறவை விழுந்து திரும்ப எழுந்து பறக்கும். அதுமாதிரிதான் நான். அதுமாதிரிதான் நீங்களும், என்றார்.




No comments:

Post a Comment