சென்னையில் கேளம்பாக்கம் அருகே மயிலாப்பூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சி அலுவலகம் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இது பற்றிய புகாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மைலாப்பூரை சேர்ந்த சதீஸ் என்பது தெரியவந்தது.
அவரது நண்பர்கள் நாகராஜன், மணி மற்றும் வெற்றிமாறன் ஆகிய 3 பேரும் முன்பகை காரணமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment