திருடர்கள், கொள்ளையர்கள் அங்கே இங்கே கையை வைத்து தற்போது அதிகாரிகள் வீட்டிலேயே கைவரிசை காட்டியுள்ளனர்.
திருச்சி நீதிமன்றம் எதிரே புதுக்கோட்டை ஏடிஎஸ்பி கண்ணன் மனைவி சாந்தி நடை பயிற்சி சென்று கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த 3 பவுன் கழுத்து சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கன்டோன்மெண்ட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் காவல்துறை அதிகாரி வீடு உள்ளிட்ட 2 வீடுகளில் கொள்ளை , கோவை அவினாசி சாலை பூங்கோதை நகரில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜானகிராமன் (Dsp) வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு.
இதேபோல் அருகே செளபாக்கியா நகரில் வங்கி அதிகாரி அசோக் வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை திருட்டு போயுள்ளது.
No comments:
Post a Comment