Thursday 16 June 2016

சேலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விசாகபட்டினத்தில் மர்மச்சாவு - தவறுதலாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததாக தகவல்



 ஆந்திராவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றும் இளம் அதிகாரி மர்மமான முறையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சசிகுமார் ஐபிஎஸ் அதிகாரி . இவர் 2012 ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை  சேர்ந்த இவர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பாடேறு என்ற ஊருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் ஏஎஸ்பியாக பதவி உயர்வில் சென்றார் .

  இன்று காலை அவரது இல்லத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு அவரது  உதவியாளர்  ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது குண்டடிப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில்  ஏஎஸ்பி சசிகுமார் கீழே கிடந்துள்ளார். அவர் கையில் ரிவால்வர் இருந்துள்ளது. இதனை கண்ட சக போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அதற்குள் சசிகுமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  தகவல் தெரிந்த போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி ரிவால்வரை கைப்பற்றினர். விசாரணையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் ஐபிஎஸ் அதிகாரி மேலதிகாரிகள் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற தகவலும் ஓடுகிறது. தவறாக கையாலப்பட்டதால் துப்பாக்கி வெடித்ததாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment