நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு மாரடைப்பால் மரணமடைந்ததாகவும் அவரது மரணத்தை அவரது மகள் சௌந்தர்யா உறுதி படுத்தியதாகவும் இதனால் தமிழகமே சோகமாக உள்ளதாகவும் , திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்துவதாகவும் இலங்கையிலிருந்து வெளியாகும் சுடர்சினிமா என்ற இணைய தளத்தில் செய்தி வெளியானது.
அது வேகமாக வலதளங்களில் பரவி வருகிறது.
இதை பற்றி அதிர்ச்சியடைந்த ரஜினி குடும்பத்தார் இதை மறுத்துள்ளனர். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது இது பற்றி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினியின் உதவியாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நள்ளிரவு என்பதால் இரவுதான் அவருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment