Friday 17 June 2016

திமுக பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை


விழுப்புரம்  திண்டிவனம் சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்குமார் (வயது48) தி.மு.க. பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு தீனா(25) என்ற மகனும், சண்முகபிரியா(16) என்ற மகளும் இருந்தனர்.

   நேற்று இரவு 4 பேரும் இரவு உணவு  சாப்பிட்டனர். சிறிது நேரத்தில்  வாயில் இருந்து நுரை தள்ளிய. சண்முகபிரியாவும், தீனாவும், கதவை திறந்து கொண்டு வெளியே வந்து மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 4 பேரையும்  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பொன்குமார், சுமதி, சண்முகப்பிரியா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீனா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து திண்டிவனம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்குமார் குடும்பத்தினர் சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.பொன்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரித்தனர்.

No comments:

Post a Comment