முதல்வர் அலுவலகத்தில் விரைவில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது . முதல்வரின் தனிச்செயலாளராக இருந்த ஷீலாபிரியா சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு கிடைக்கும் என்ற நிலையில் அவரது ஓய்வு உறுதி ஆகிவிட்டது. தற்போது ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருக்கு நெருக்கமான அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி முதல்வர் ஜெயலலிதா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது முதல் பொறுப்பேற்றவரை அனைத்து காரியங்களையும் சிறப்பாக முன்னின்று நடத்தி காட்டி நன்மதிப்பை பெற்றுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி முதல்வரிடம் நன்மதிப்பை பெற்றவர் அவர். அவரது கணவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் கல்வித்துறை செயலர் சபிதா ஐஏஎஸ் ஆவார். அவருக்கு விரைவில் தனிச்செயலர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தலைமைசெயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்வித்துறைக்கு பூஜாகுல்கர்னி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment