திமுக தலைவர் கலந்து கொள்ளாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
கேள்வி:சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?
பதில்:திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 42 பேர் புதிய உறுப்பினர்கள் அவர்களுக்கு சட்டமன்ற விதிமுறைகள் வரம்பு பற்றி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்குத்தான் இந்த கூட்டம்.
கேள்வி: சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏன் திமுக தலைவர் பங்கேற்கவில்லை?
பதில்: அவருக்கு உடல் நலம் சரியில்லை. உடம்பு காய்ச்சலாக இருந்தது அதனால் கலந்துகொள்ளவில்லை.
கேள்வி:நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் என்ன பிரச்சனை எழுப்ப உள்ளீர்கள்?
பதில்: நாளைக்கு சட்டமன்றத்திற்கு வாங்க. ஆளுநர் உரை வருகிறது. நடைபெறும் விவாதத்தில் என்ன பேசவேண்டுமோ அவசியம் பேசுவோம்.
கேள்வி:நாளைக்கு சட்டமன்ற கூட்டத்தில் திமுக தலைவர் கலந்துகொள்வாரா?
பதில்: இடவசதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். கொடுத்தால் அதுபற்றி பரிசீலிப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேட்டியளித்தார்
No comments:
Post a Comment