மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக தோல்வியை தொடர்ந்து வைகோவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பகீரங்கமாக விமர்சித்து பத்திரிக்கைகளில் பேட்டியளித்திருந்தார். இதனால் மதிமுகவிலிருந்து இவர் விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் சுமார் 50 பேருடன் வந்த வேளச்சேரி மணிமாறன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அவருக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். திமுக சென்னை ஆர்தெ.எஸ்ற்கு.பாரதி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். வேளச்சேரி மணிமாறனுடன் ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜும் திமுகவில் இணைந்தார்.
வைகோவின் செயல்பாடுகள் சரியில்லை அவரை நம்பி இனி ம.தி.மு.க.வில் இருக்க முடியாது என்பதால் தாய் கழகமான தி.மு.க.வில் இணைந்ததாக வேளச்சேரி மணிமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment