Friday 10 June 2016

திமுகவில் அதிரடி - மூன்று மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

தேர்தல் பணி புகார் அடிப்படையில் திமுகவிலிருந்து மூன்று மாவட்ட செயலாளர்களை அதிரடியாக நீக்கி பொறுப்பாளார்களை நியமித்துள்ளது திமுக தலைமை 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் தோற்று போனது. இதற்கான காரணங்கள் ஆராயப்படும் துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். பல மாவட்டங்களில் திமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை இதனால் காங்கிரஸ் பல இடங்களில் தோற்றது என்பது காங்கிரசார் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.இந்நிலையில் இது போன்ற நடவடிக்கை வந்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தொடரும் என தெரிகிறது.
இது குறித்து  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளதாவது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் , நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், கோவை வடக்கு  மாவட்ட செயலாளர் வீரகோபால்  நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக  பார் இளங்கோவன், கோவை வடக்கு மவட்ட பொறுப்பாளராக முத்துசாமி  , நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக  சிவ.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment