Thursday 16 June 2016

காணாமல் போன ஒரு ஐஏஎஸ் அதிகாரி - அரசு அறிவிப்பில் குழப்பம்




ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதில் குழப்பம் ஏற்பட்டது 26 பேருக்கு 27 பேர் என அறிக்கையில் தவறாக பதிவு செய்யப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இது பற்றிய எந்த திருத்தத்தையும் அரசு அதிகாரிகள் அனுப்பவில்லை.
தமிழக அரசு நேற்று அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் பிறப்பித்து அதற்கான சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. 
 அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பட்ட அரசின் சுற்றறிக்கையில் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரிசை படுத்தி பார்த்தால் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றிய அறிவிப்பு மட்டுமே வந்தது .  ஆனால் அறிக்கையில் 27 என்று  இருந்தது. இதனால் எல்லோரும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் என போட்டு செய்தியில் 26 பேர் பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர். 


காணாமல் போன அந்த ஒரு ஐஏஎஸ் அதிக்காரி எங்கே என தேடிய போது 16 வது நபராக டி.எஸ்.  ராஜசேகருக்கு பின் , 17 வது நபராக அமுதா வருவதற்கு பதில் 18 என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment