Sunday 5 June 2016

ஸ்மிரிதி இராணி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்ட சதி - கலைஞர் கண்டுபிடிப்பு

உடான்ஸ் பத்திரிக்கை...

இந்த பத்திரிக்கை சார்பில் வரும் செய்திகள் அனைத்தும் கற்பனை ஆனால் நகைச்சுவையுடன் இருக்கும்.யாரையும் அவதூறு செய்ய அல்ல..

உடான்ஸ் பத்திரிக்கையின் முதல் செய்தி கலைஞர் இப்படியும் அறிக்கை விட்டால் எப்படி இருக்கும். இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை:


உடன்பிறப்பே, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் ,ஆனால் நமது வெற்றியை தடுக்கத்தான் எத்தனை தடைகற்கள். கேடுகெட்ட தேர்தல் ஆணையம் ஒருபுறம், ஓட்டுக்கு பணம் கொடுத்ததை வேடிக்கை பார்த்தது மறுபுறம் . 
காலை 10 மணிக்கே பிரதமர் வாழ்த்து சொன்னதால் நம்மை வீழ்த்தியது ஒருபுறம் . தற்போது மற்றொரு சதியும் வெளிப்பட்டுள்ளது. காலையில் தான் தம்பி ஸ்டாலின் இதை கண்டுபிடித்து சொன்னார். 

அதுதான் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இரானி பாஜகவுக்கு வாக்கு கேட்பதுபோல் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டுள்ள சதி வெளிவந்துள்ளது.  இது போன்ற சதிகளை தடைகளை உடைத்து போர்பரணி பாடும் இயக்கம் நம் இயக்கம்.

உடன்பிறப்பே பிரதமர் முன்கூட்டியே வாழ்த்து சொன்னதால் அதிமுக வென்றது என்ற சேதியுடன் ஸ்மிரிதி இரானியின் இந்த பிரச்சாரயுக்தியும் நம்மை வீழ்த்த அவர்கள் வெல்ல  ஒரு காரணம் என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும். 

இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பாயாக , என் கருத்தை என்னைவிட வேகமாக நானே வியப்படையும் வண்ணம் தம்பி ஈவிகேஎஸ் இதை முன்னெடுத்து செல்லும்போது நாம் வாளாவிருப்பது சரியல்ல புறப்படுவோம் போர்பரணி பாட.

No comments:

Post a Comment