Sunday 5 June 2016

பரோலில் வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை திருவொற்றியூரில் பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவொற்றியூர்பகுதியை சேர்ந்தவர் விஜய குமார். இவர் 2001 ஆம் ஆண்டு நடந்த கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பரோலில் விஜயகுமார் வெளியே வந்தார்.
 இந்நிலையில் விஜயகுமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவொற்றியூர் போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment