Saturday 11 June 2016

ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நன்றி- அற்புதம்மாள் நெகிழ்ச்சி



எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது ஊர்வலம். தனது மகண் விடுதலைக்காக இத்தனை பேர் திர்ண்டுவந்தது பெருமையாக இருக்கிறது.அனைவருடை ஆதரவு தனக்கு நம்பிக்கை அளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன்,சாந்தன், முருகன் , நளினி உள்ளிட்ட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எஅன் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . ஆனாலும்  அவர்கள்  விடுவிக்கப்படவில்லை.


ஏழுபேரைஅயும் விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. முதலில் வேலூரிலிருந்து வாகன பேரணி நடத்துவதாக் இருந்தது ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் பேரணி சென்னை எழும்பூரிலிருந்து ஆல்பர்ட் தியேட்டர் வரை நடந்தது.

 பேரணியில் அற்புதம்மாள் தலைமை தாங்க அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ரமதாஸ், சீமான், பண்ருட்டி வேல்முருகன், மல்லை சத்யா, பழ.நெடுமாறன் , வெள்ளையன், திரையுலக பிரபலங்கள் நடிகர் சஙக் தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், சத்யராஜ் , இயக்குனர்கள் , துணை இயக்குனர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



ஊர்வலத்தின் இறுதியில் அனைவருக்கும் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பின்னர் போலீசார் உதவியுடன் தலைமை செயலகத்துக்கு மனு அளிக்க அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அற்புதம்மாள் , வழக்கறிஞர் சிவகுமார்.இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், மணிமேகலை உள்ளிட்ட 4 பேர் முதல்வரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment