Friday 17 June 2016

மதுவினால் ஏற்படும் தீமை உலக சுகாதார ஆலோசனைகளுக்கான குழு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



உலக சுகாதார நிறுவன ஆலோசனைகளை அமல்படுத்த குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கறிஞர் பாலு உலக சுகாதார நிறுவனம் தன்னுடை உறுப்பு நாடுகளுக்கு மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுபடுத்த 21 விதிமுறைகளை கடந்த 2014 ம் ஆண்டு வகுத்தது. அதனை தமிழக அரசு பின்பற்றவில்லை, அதை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு குழு அமைக்க வேண்டும். அந்த குழு மது தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும் தொண்டு நிறுவனஙகளிடமும் ஆலோசனை பெறலாம் என  உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment