ஆழ்வார்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு தீனதயாளன் என்பவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் ஓவியங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குநர் சத்தியபாமா தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு நாளை சென்னை வருகின்றனர். அவர்கள் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் ஓவியங்களை ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் அந்த சிலைகள் மற்றும் ஓவியங்களின் உண்மையான மதிப்பும் எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்ற தகவல்களும் வெளியாகலாம். மேலும் தீனதயாளனுக்கு சொந்தமான அடையாரில் உள்ள ஓவியக்கூடத்திலும் ஆய்வு செய்யப்படும்.
Pic Courtesy : The New Indian Express
No comments:
Post a Comment