Sunday 5 June 2016

அயனாவரம் போலீஸ் வேன் மோதிய விபத்து -- மற்றொரு மாணவனும் பலி



சென்னையில் அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதி 10 ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று
வந்த மற்றொரு மாணவனும் சிகிச்சை பலனின்றி பலியானான்.  வேனை ஓட்டி வந்த காவலர் ஏழுமலை கைது செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராம் குமார் (16) மற்றும் அவனது நண்பன் சாலமன்(16) இருவரும்   அயனாரம் ரயில்வே காலணியில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிவிட்டு  இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காவல்துறை வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலமன் படுகாயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சாலமனும் மரணமடைந்ததை ஒட்டி பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.  வேனை ஓட்டி வந்த காவலர்  ஏழுமலை கைது செய்யப்பட்டார். 

No comments:

Post a Comment